Ticker

6/recent/ticker-posts

Read posts in your preferred Language

நாயகனாக 29 ஆண்டு காலம் தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் பயணம் | Tamil Serial Gossips

Help Us By Just Clicking Below

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நாயகனாக நடித்த ‘வெற்றி’, ‘குடும்பம்’, ‘வசந்தராகம்’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’ ஆகிய படங்களில் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நாயகனாக அறிமுகமான 'நாளைய தீர்ப்பு' திரைப்படம் டிசம்பர் 4, 1992ஆம் ஆண்டு வெளியானது. அதன்படி விஜய் நடிக்க வந்து இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

ரஜினிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகத் திகழும் ஒரு நடிகரைக் கை காட்டுங்கள் என்றால் அத்தனை பேரின் கைகளும் விஜய்யை சுட்டிக்காட்டும். அந்த அளவுக்கு அசுர பலத்துடன் தன் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்துள்ளார் விஜய். வசந்தம் ஒரே நாளில் வந்துவிடாது. அதுபோல்தான் இந்த வெற்றியும் விஜய்க்கு அவ்வளவு விரைவில் கைவரப்பெறவில்லை.



நாளைய தீர்ப்பு

சினிமாவில் வாரிசு நடிகர் குறித்த விவாதங்கள், விமர்சனங்கள் விஜய் நடிக்க வந்தபோதுதான் தொடங்கின. ஆனால், அவருடன் நடிக்க வந்து திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்த பலர் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முடியாமல் காணாமல் போயிருக்கிறார்கள் அல்லது அந்த மாய வித்தை தெரியாமல் திணறி, அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்காமல் ஒதுங்கிப் போயுள்ளனர். ஆனால், உச்ச நட்சத்திரத்துக்குரிய அந்தஸ்தைப் பெற விஜய் தன்னைத் தொடர்ந்து தகுதிப்படுத்திக் கொண்டார். அதனாலேயே இப்போதும் அந்த நற்பெயரை, வியாபார மதிப்பைத் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது.

‘நாளைய தீர்ப்பு’ படம் வந்தபோது விஜய்யை உருவ கேலி செய்து அவமானப்படுத்திய முன்னணிப் பத்திரிகைகள், வெகுஜன ரசிகர்கள் கூட இன்று அவரை ஆகச் சிறந்த ஆளுமை என்று புகழாரம் சூட்டி கவுரவப்படுத்துகிறார்கள். அதுதான் அவர் கடந்து வந்த பாதைக்கான ஒரு பருக்கை உதாரணம்.

சினிமாவுக்குள் நடிக்க வந்த உடனேயே பாட்டு, டான்ஸ், ஃபைட் என்று அனைத்தையும் விஜய் கற்றுக்கொண்டு வரவில்லை. ஆனால், நாயகனுக்கான அத்தனை விஷயங்களையும் திரைத்துறக்கு வந்த பிறகு கசடறக் கற்றார். இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய் என்று பாடலுக்குக் கீழே ஸ்லைடு போடும்போது கைகொட்டிச் சிரித்தவர்கள் இன்று அவரின் பாடும் திறனை சிலாகித்துப் பேசுகிறார்கள். நடன அசைவை வாய் பிளந்து ரசிக்கிறார்கள். சண்டைக் காட்சியில் துல்லிய நடிப்பைக் கண்டு கரவொலி எழுப்புகிறார்கள்.


‘பூவே உனக்காக’ தந்த மாற்றம்


அப்பாவின் இயக்கத்தில் நடித்த விஜய்யின் படக் காட்சிகள் சர்ச்சைகளைச் சந்திக்காமல் இருந்ததில்லை. மாமியாருக்குக் குளியலறையில் சோப் போடும் காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் விமர்சனங்களுக்கு ஆட்பட்டார். அந்த இமேஜை அப்படியே மாற்றியது, விஜய்யைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுசேர்த்தது ‘பூவே உனக்காக’ படம்தான் என்றால் அது 200 சதவீத உண்மை.


கள்ளம் கபடமில்லாத, அப்பழுக்கற்ற தூய ஆன்மாவின் வெளிப்பாடாகவே விஜய்யின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது. அதுவரை ஒருதலைக்காதல் என்று கொஞ்சம் கூச்சமாகவும், தோல்வி அடைந்தவனின் முகாரி ராகமாகவும், அவமானமாகவும் உணர்ந்தவர்கள் அதுவும் உன்னதமான காதல்தான் என்று தலைநிமிர்ந்து சொல்ல ஆரம்பித்தார்கள். உணரத் தொடங்கினார்கள். சொல்லாத காதல் வெல்லாது என்றாலும் அந்தக் காதலும் சுகமானதே என்று சுய சமாதானம் ஆனார்கள். அந்த சுய ஆறுதல் விஜய்யின் நடிப்புக்குக் கிடைத்த வெற்றிதான் என்பதை மறுக்க முடியாது.


அந்த நடிப்புக்குக் கிடைத்த ஆரவாரம்தான் விஜய்யைத் தொடர்ந்து காதல் படங்களில் கவனம் செலுத்த உந்து சக்தியாக இருந்தது. ‘லவ் டுடே’, ‘நிலாவே வா’,‘ப்ரியமானவளே’,‘குஷி’,‘என்றென்றும் காதல்’,‘வசீகரா’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘ஒன்ஸ்மோர்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’,‘காதலுக்கு மரியாதை’,‘ஷாஹஜான்’, ‘யூத்’, ‘ப்ரியமுடன்’, ‘மின்சார கண்ணா’,‘சச்சின்’,‘காவலன்’ என்று காதலின் அத்தனை பரிமாணங்களும் இருக்கும் படங்களில் நடித்தார். அதுவும் ‘காவலன்’ படத்தில் மென்மையான, அதே சமயம் உறுதியான காதலனைக் கண்முன் நிறுத்தினார். அப்படி ஒரு அமைதிப் பேர்வழியாக தன் இயல்பான குணத்தை பூமிநாதன் கேரக்டரில் கடத்திய விதமே பாத்திர வார்ப்புக்கு கம்பீரம் சேர்த்தது.

மேலும் பல என்னற்ற சாதனங்களை படைத்துள்ளார் தளபதி விஜய் , அவரின் சாதனங்களை மேலும் தொடர என் வாழ்த்துக்கள்!! 

மேலும் இந்த தகவல்களை ஆங்கிலத்தில் படிக்க கீழே உள்ள (Translate) என்ற பிரிவை கிளிக் செய்யவும், தங்கள் விருப்பமான மொழியில் படிக்கலாம்!



கருத்துரையிடுக

0 கருத்துகள்